Home trincomalee news திருமரையில் சைவ ஆலய வழிபாட்டை தடுத்து நிறுத்திய முப்படையினர்..!

திருமரையில் சைவ ஆலய வழிபாட்டை தடுத்து நிறுத்திய முப்படையினர்..!

79

திருகோணமலை முருகன் ஆலயத்தில் பூஜை வழிபடுகளை நடத்துவதற்கு முப்படையினர் தடைவித்துள்ளனர்.

மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு திருகோணமலை, தென்னமரவாடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் இடம்பெறுவது வழமை. இவ்வாறான நிலையில், இம்மாத பௌர்ணமி பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்களே, முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த முருகன் ஆலயப் பகுதி பௌத்த விகாரைக்கு உரியது எனவும் நீநிமன்ற தடை இருப்பதன் காரணமாக எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தே பெதுமக்கள் முப்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி கிராமத்தில் உள்ள மிகப்பழமையான கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்தம் கிராம மக்களால் பௌர்ணமிதின பொங்கல் நிகழ்வு முன்னெடுக்கப்படுவது வழக்கமாக நிகழ்ந்து வரும் ஒன்றாக காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெருகல், மூதூர், மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் சென்றிருந்தனர்.

இதன்போது அதிகளவிலான பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதிக்குள் பொதுமக்களை நுழையவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.

குறித்த பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் லவகுச ராசா, சமூக செயற்பாட்டாளர் நவரெத்தினராசா அஞ்சலி, ஆலய தலைவர் வைரமுத்து விஜயநாயகம் உட்பட அகம் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு எதிராக புல்மோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

அதேவேளை, பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவதற்கு ஏனைய பொதுமக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

Previous article5000 த்திற்கு பதிலாக 35000 ரூபா தொடர்ச்சியா ஏமாற்றபடும் சுற்றுலா பயணிகள்..!
Next articleகாதலியுடன் விடுதியில் தங்குவதற்கு பணத்தை திருடிய காதலன்-தமிழர் பகுதியில் சம்பவம்..!