social disorder
Home social disorder
social disorder தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்
யாழ் அரச ஊழியர்களின் கள்ள அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில்-அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் மிக வேகமாக பாலியல் துர்நடத்தைகள் அதிகரித்துள்ளன. யாழ் நகர்ப் பகுதிகளுக்கு அண்மையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவிகளை குறி வைத்து அவர்களை துர்நடத்தைகளுக்கு உள்ளாக்குவதற்கென்றே ஒரு குழு ஈடுபட்டு வருகின்றது. காதல் என்ற போர்வையிலும் பணம், கார்களைக் காட்டியும் குறித்த குழுக்கள் மாணவிகளை வேட்டையாடி வருகின்றன. தனது மகள் ரியூசன் மற்றும் மேலதிக கற்றல் நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றாள் என பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் அவ்வாறு செல்லும் மாணவிகள் மற்றும் இளம் யுவதிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் இலக்கு வைக்கப்பட்டு பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றார்கள். இவ்வாறான யுவதிகளை சொகுசு வாகனங்கள் மற்றும் பண ஆசை, வேலை வாய்ப்பு போன்றவற்றை காட்டி தமது இச்சைகளுக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவ்வாறானவர்களுக்காக யாழ். நகர் மற்றும் புற நகர்ப் பகுதிகளில் சில சொகுசு வீடுகளில் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. அங்கு செல்லும் ஜோடிகளு்ககு சாப்பாடு முதல் சாராயம் […]
10 வயது மாணவி வன்புணர்வு – 59 வயதான பாடசாலை பிரதி அதிபர் கைது!
தரம் 5 மாணவியை வன்புணர்விற்குள்ளாக்கிய பாடசாலை பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் பிரதி அதிபரை கைது செய்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி சந்தேகத்திற்குரிய பிரதி அதிபரால் மாணவி பாடசாலையில் வைத்து வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டதாக பெற்றோர் அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (16) கராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமியை முன்னிலைப்படுத்திய நிலையில் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபர் ஹபராதுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது காவல்துறையின் விளக்கமறியலில் உள்ள 59 வயதான சந்தேகநபரான பிரதி அதிபர் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
காலக்கொடுமை!! 15 வயது சிறுவனால் 8வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
புத்தளத்தில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கதெனிய – கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவனை சிலாபம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓடும் பேருந்திற்குள் வைத்து நடத்துனர், ஓட்டுநரால் மாணவி வல்லுறவு
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியை வல்லுறவுக்குள்ளாக்கிய சந்தேகநபர் கும்பக்வெவ நிககொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர். யக்கல பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் களஞ்சிய முகாமையாளராக பணிபுரிகிறார்.பேருந்து சாரதி, வெல்கல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர். நடத்துனராக இருப்பவர் பெரியகடுனாலாவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர்.கடந்த 11ஆம் திகதி வழமை போன்று பாடசாலை முடிந்து பாடசாலைக்கு அருகில் உள்ள நிறுத்தத்தில் இருந்து, இந்த மாணவி பேருந்தில் ஏறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் மாணவியின் இல்லம் அமைந்துள்ள வடுகம பகுதியை பேருந்து அண்மித்த போது,மாணவி, சாரதி, நடத்துனர் மற்றும் அவரை வல்லுறவுக்குள்ளாக்கிய சந்தேக நபர் மட்டுமே பேருந்தில் இருந்தனர். வடுகம பிரதேசத்திற்கு அருகில் மாணவி பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட […]
போதை ரொபி கொடுத்து சிறுவனை சீரழித்த பேருந்து சாரதி
11 வயது சிறுவனுக்கு போதை டொஃபி கொடுத்து பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாடசாலை பேருந்து சாரதி ஒருவரை குருநாகல் பொலிஸ் மகளிர் பணியகம் இன்று (14) கைதுசெய்துள்ளது. நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பேருந்து சாரதிக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அதனை நிறைவேற்ற தவறியதால் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.