கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் (05.11.2023) காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதி, தாவடி என்ற இடத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.